இது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் ஒரு கதை. எனது குறிக்கோளை அடைவதற்காக சில வருடங்களாக நான் பின்பற்றும் ஒரு அற்புத டெக்னிக் இது. இன்று உங்களுக்குப் புரிய வைப்பதற்காக ஒரு சுவாரசியமான கதையாக வடிவமைத்துள்ளேன். என்ன, கதையைப் பார்க்கலாமா ?
இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video
ஒருநாள், ஒரு கடற்கரை ஓரமாக ஒரு வாலிபன் நடந்து கொண்டிருந்தான். அவன் நிறைய ஆசைகள், இலட்சியங்கள் மற்றும் கொண்டிருந்த இளைஞன். ஆயினும், 'தனது முயற்சி ஜெயிக்குமா ? தான் நினைத்தது நடக்குமா ?' என்று எப்போதுமே அவனுக்குள் ஒரு சந்தேகம் உண்டு.
இப்படி இருக்கும்போது, அவன் நடந்து கொண்டிருந்த அந்தக் கடற்கரையில் அவன் ஒரு ஞானியைப் பார்த்தான். வேகமாக அந்த ஞானியிடம் சென்று, தனது ஆசையையும், 'அது நிறைவேறுமா ?' என்ற தனது சந்தேகத்தையும் தெரிவித்தான்.
அந்த ஞானியோ அவனிடம், "இந்தக் கடற்கரையின் சிறப்பைப் பற்றி உனக்குத் தெரியுமா ?" என்று கேட்டார். அவன் "தெரியாது" என்றான்.
அவர் மறுபடியும், "ஓ !! அப்படியென்றால் நான் இன்று உனக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். இந்தக் கடற்கரையில் மிக அற்புதமான சிப்பியொன்று இருக்கிறது. விசேஷம் என்னவென்றால், அதில் உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இன்று மட்டும், உனது பெயர் எழுதப்பட்ட அந்தச் சிப்பியை நீ தேடிக் கண்டுபிடித்துவிட்டால், உன்னால் நீ நினைக்கும் யாவற்றையும் செய்து முடிக்க முடியும்" என்றார்.
அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதே நேரத்தில், 'அந்த அற்புதச் சிப்பியை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும்' என்ற ஆவலும் அவனுக்குள் ஏற்பட்டது. அதனால், அந்தக் கடற்கரையில் தனது பெயர் எழுதப்பட்ட அந்த சிப்பியை அவன் தேட ஆரம்பித்தான். முதல் சில நிமிடங்கள் அவன் ஆர்வத்தோடு தேடினாலும், அடுத்த சில நிமிடங்களில் 'உண்மையாகவே அப்படி ஒரு சிப்பி இங்கிருக்கிறதா ?' என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. சற்று நேரத் தேடலுக்குப் பிறகு, 'அந்த ஞானி சொல்வது உண்மைதானா ?' என்று அந்த சந்தேகம் வலுத்தது. தேடுவதைப் பாதியிலேயே விட்டுவிட்டு, சோர்வடைந்து, கடற்கரை மணலில் சென்று உட்கார்ந்து கொண்டான்.
அதே நேரத்தில், அந்த ஞானியும் அவன் முன் வந்து நின்றார். "என்னப்பா தேடலையா ? அல்லது உனது சிப்பியை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டாயா ?" , என்று கேட்டார்.
அவன் "இல்லை, நான் தேடினேன். அது கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், உண்மையிலேயே அப்படி ஒரு சிப்பி இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு வந்துவிட்டது" என்று கூறினான்.
அவர் சிரித்தபடியே, அவனுக்கு முன்பாக தனது கைகளை நீட்டினார். அந்தக் கைகளை அவர் திறந்த பொழுது அதற்குள் ஒரு சிப்பி இருந்தது. அந்தச் சிப்பியில், அவனது பெயரும் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "அட ! நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்களே ! சரி, அப்போ எனக்கு கொடுங்க" என்று அவரிடம் கேட்டான்.
அவரோ, "இல்லை. இது நான் கண்டுபிடித்த சிப்பி. உனக்கு வேண்டுமென்றால் , நீ தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் அதை அந்த கடற்கரையில் வீசியெறிந்தார்.
'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே !' , என்று எண்ணிய அந்த இளைஞன், அவர் வீசியெறிந்த திசையிலேயே மறுபடியும் அதைத் தேட ஆரம்பித்தான். அப்போது வெயில் சற்று இருந்ததால், அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. சீக்கிரத்திலேயே, சோர்வு ஏற்பட்டது. ஆனாலும், ஏற்கனவே உறுதியாகத் தெரிந்த பின்னும், அந்த ஞாநி அதைத் தனது கையில் வைத்திருந்ததை மிக அருகிலேயே நின்று பார்த்த பின்னும், விட்டுவிட அவனுக்கு மனம் வரவில்லை. அதனால், 'அதை எப்படியாவது அடைந்து விடவேண்டும்' என்பதில் மட்டுமே தனது கவனத்தைச் செலுத்தி, அடுத்த சில மணி நேரங்களில் அதைக் கண்டுபிடிக்கவும் செய்தான்.
அப்படி அவன் கண்டுபிடித்த அடுத்த நொடி, அந்த ஞானியும் அவன் முன்னே வந்து நின்றார்.
"கண்டுபிடிச்சாச்சா ?" , என்றார்.
அவன் மகிழ்ச்சியோடு "ஆம்" , என்று தலையாட்டினான்.
அப்பொழுது அவர் சொன்னார், "என்னவொரு ஆச்சரியம் ! இதற்கு முன்பு, வெறும் ஒரு மணி நேரமே தேடிவிட்டு, சோர்வடைந்து இந்தக் கடற்கரையில் வந்து உட்கார்ந்திருந்தாய். இப்போது உச்சிவெயில் கொழுத்தும் வேளையில், மூன்று மணி நேரங்கள் தேடி கண்டுபிடித்து வந்துள்ளாயே ! பரவாயில்லையே " என்று.
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், "ஆமா, சாமி. முதல்ல அப்படி ஒண்ணு இருக்கா, இல்லையான்னு எனக்கொரு சந்தேகம் இருந்தது. ஆனால், அப்புறம் உங்க கைல நான் அத பாத்துட்டேனா ! விட மனசு வரல. எப்படியாவது அத எடுத்துட்டுதான் வீட்டுக்குப் போகணும்னு உறுதியா இருந்தேன். நேரம் போனதே தெரியல" , என்று.
இப்படி அவன் கூறி முடித்ததும், அந்த ஞானி அவனிடம் சொன்னார் "மகனே ! உண்மையில் நான் சொன்ன அந்த ரகசியம் என்பது பெயர் எழுதப்பட்ட இந்த சிப்பியில் இல்லை. இருக்கிறதா ? இல்லையா ? என்று சந்தேகப்படாமல், இருக்கிற ஒன்றைத் தான் நாம் தேடுகிறோம் என்ற மன உறுதியோடு நீ தேடியதில் தான், ரகசியமே இருக்கிறது. எப்படி இன்று பெயர் எழுதப்பட்ட அந்தச் சிப்பியை உனது கண்ணில் நான் காட்டியவுடன் சந்தேகத்தை ஒதுக்கிவிட்டு உற்சாகமாக தேடினாயோ, அப்படியே உனது குறிக்கோள் எல்லாவற்றுக்குமான உனது வெற்றியையும் கற்பனை செய்து மனக்கண்ணில் பார். அது ஏற்கனவே உனக்காக ஒதுக்கப்பட்டு விட்டது என்று நம்பி, அதற்காக நீ உழைக்கத் தொடங்கு. அப்போது மட்டும்தான், உன்னால் அதில் வெற்றி பெறவும் முடியும்.
சந்தேகம் என்பது ஒரு மனிதனை சோர்வடையச் செய்கிறது. அதுவே தனக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வெற்றிக்காகத் தான் நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம், உற்சாகத்தைத் தருகிறது. இதைத்தான் நான் இன்று உனக்குக் கற்றுக் கொடுக்கவும் விரும்பினேன்" என்று.
அன்று ஒரு மிகப்பெரிய பாடத்தோடு அந்தக் கடற்கரையிலிருந்து வீடு திரும்பினான் அந்த இளைஞன். இன்றைக்கு இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருக்கிற நாமும் கூட, ஏதாவது ஒரு குறிக்கோளுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கலாம். ஆனால், அவ்வப்போது "இது கிடைக்குமா ? கிடைக்காதா ? ஒருவேளை கிடைக்கவில்லையென்றால் ?' என்ற சந்தேகமும் நமக்குள் ஏற்பட்டலாம்.
வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, 'வேலை கிடைக்குமா ?' என்ற சந்தேகம். நல்ல மதிப்பெண்களுக்காகப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, 'தேர்வு எளிதாக இருக்குமா ?' என்று சந்தேகம். வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 'கையிலிருக்கும் பணத்துக்கு நல்லதொரு வீடு கிடைக்குமா ?' என்ற சந்தேகம்.
ஆக மொத்தத்தில், குறிக்கோளோடு சேர்த்து சந்தேகங்களையும் நாம் கட்டிக் கொண்டு திரிகிறோம். அப்படி கட்டிக் கொண்டிருப்பது என்ன செய்கிறது தெரியுமா ? நம்மையே அறியாமல், நமக்கு அது சோர்வைத் தந்துவிடுகிறது. நம்மை பலவீனமடையச் செய்கிறது.
அதனால், அப்படி ஒருபோதும் சந்தேகங்களை அணைத்துக்கொள்ளாதீர்கள். "எனக்கு இது கிடைக்கும். ஏற்கனவே, எனக்காக ஒதுக்கப்பட்டுவிட்ட ஒன்றுக்காகத்தான் நான் உழைக்கிறேன். ஒழுங்காக உழைத்தால் மட்டும் போதும். எனது விருப்பமானதெல்லாம் எனக்குச் சொந்தமாகிவிடும்" , என்ற நம்பிக்கையை மட்டும் உங்களுக்குள் விதைத்துக் கொள்ளுங்கள்.
பெயர் எழுதப்பட்ட அந்த சிப்பியைப்போல உங்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த வெற்றியைக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒருவேளை வேலைக்காக முயற்சி மற்றும் செய்து கொண்டிருந்தால் உங்களுக்கான வேலை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டதாக, நல்ல மதிப்பெண்களுக்காகப் படித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கான உயர்ந்த மதிப்பெண் உங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டதாக, ஒருவேளை நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தால், உங்களுக்கான வீடு நல்ல முறையில் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் உங்கள் மனதில் பதிய வையுங்கள்.
'கிடைக்குமா ? கிடைக்காதா ? நடக்குமா ? நடக்காதா ?' என்ற சந்தேகங்களை விட்டுவிட்டு, 'நிர்மயிக்கப்பட்ட வெற்றிக்காகத்தான் நாம் முயற்சி செய்கிறோம்' என்று உறுதியாக நம்பி, உழைத்தால் அது நிச்சயம் கைகூடும். அப்படி உழைக்கும் சூழலையும், நல்ல ஆரோக்கியத்தையும் இறைவன் உங்களுக்குத் தரட்டும் என்று சொல்லி இந்தக் கதையை நான் முடிக்கிறேன்.
இந்தக் கதையை ஒரு காணொளியாகப் பார்க்க
Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள்
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil
அடுத்தவர்களின் விமர்சனங்களுக்கு நீங்கள் அஞ்சுபவர்களாக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்.
ஆட்டுப் பந்தயம் - Goat Race - An interesting Motivational Kutty Story in Tamil
If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,Applebox Motivational, Motivational Stories Applebox, Kutty Stories Applebox and Oru Kutty Kadhai Applebox
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, Motivational Video in Tamil for College Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.