About Me - Sabari

வணக்கம் !!

நான் உங்கள் சபரி பரமசிவன். என்னிடம் கதை கேட்பவர்களைப் பொறுத்தவரை "APPLEBOX SABARI"


முதலில், இந்தப் பக்கத்தை வாசிப்பதற்காகவும், கதைகளையும் என்னையும் மிகுதியாக நேசிப்பதற்காகவும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவுமே தொடர்ந்து என்னைப் பயணிக்கச் செய்கிறது.

இப்போது, நீங்கள் மேலும் என்னைத் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக, என்னைப் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தந்து விடுகிறேன். வள வளவென்று நீண்டால், போரடித்து விடாதோ !! அதனால், கேள்வி-பதில்களாக அதை வடிவமைத்துள்ளேன். வாருங்கள் பார்க்கலாம்.

உங்க முழு பெயரே 'சபரி' தானா ?

இல்லை. எனது முழுப்பெயர் 'சபரி சங்கரி'. ஆனால், புத்தகங்களிலும் கதை, கட்டுரைகளிலும் கையெழுத்திடுவது 'சபரி பரமசிவன்' என்று.

எனது அப்பாவின் பெயர் பரமசிவன் என்பதாலும், திருமணத்துக்கு முன்னரே நான் எழுதத் தொடங்கிவிட்டதாலும் அப்பெயரே நிலைத்துவிட்டது.

சபரிக்கு எந்த ஊரு ?



நாகர்கோவில், திருநெல்வேலி - இரண்டையுமே சொல்லலாம். இதில், அப்பாவுக்கு திருநெல்வேலி, அம்மாவுக்கு நாகர்கோவில்.அதனால், திருநெல்வேலியிலும் நாகர்கோவிலிலுமாய் மாறி, மாறி வளர்ந்த ஒரு 'ஹைப்பிரிட்' குழந்தை நான். குறிப்பாக, திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் நான் எனது இளமைக் காலத்தைக் கழித்திருக்கிறேன்.

நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை பார்க்குறீங்க ?

நான் பள்ளிப் படிப்பை முடித்தது வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில். கல்லூரிப் படிப்பு மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில். அப்படியே, சென்னையிலிருக்கும் IBM-ல் பொறியாளராக எனது வேலையைத் தொடங்கினேன்.

அதன் பின், AT&T Laboratories, L&T போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு, சாண் டியாகோ - யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவில் 'செயற்க்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு' ஆய்வுக்கான படிப்பையும் முடித்தேன். அதன் மூலம், அதே ஆராய்ச்சி தொடர்பான START UP நிறுவனங்களிலும், ஆலோசனைக் குழுக்களிலும் எனது பணியைத் தொடர ஆரம்பித்தேன். வருங்காலத்தில், இவை தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடங்க ஆர்வம் உண்டு. அவ்ளோதான்.

திருமணம் மற்றும் குழந்தைகள் ?

ஓ.. கண்டிப்பா. 2012-ல் எங்களுக்குத் திருமணமானது. எனது கணவரும் ஒரு பொறியாளர். எங்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.

2014-ல் வேலைநிமித்தமாக அமெரிக்கா வந்த நாங்கள், எங்கள் துவக்க நாட்களை பென்சில்வேனியா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் கழித்துவிட்டு, தற்போது ஜியார்ஜியா மாகாணத்துக்குக் குடிபெயர்ந்துள்ளோம்.


APPLEBOX-ஐ ஆரம்பித்தது எப்படி ?

ரொம்ப சிம்பிள். நான் எழுதிய கதைகளை 'நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்பதற்காக நான் செய்த பல முயற்சிகளில் ஒன்று தான் இந்த 'APPLEBOX'. ஆனால், இதற்கு அடித்தளமாக ஒரு '20 வருட முன்கதைச் சுருக்கம்' உண்டு.

ஒருவேளை அதைப் பகிர்ந்துகொண்டால், அது உங்களில் சிலரை ஊக்கப்படுத்தலாம் என்பதால்,, சில வரிகளில் மட்டும் சொல்லுகிறேன்.


சரியாகப் பத்து வயதிருக்கும். நான் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தபோது. ஒருநாள், பள்ளி வழியாக அது பத்திரிக்கையிலும் பிரசுரமாக, அதன் பின் எதையாவது எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது தான் எனக்கு வேலையே !! அதில் வெகுசில மட்டும், அவ்வப்போது பத்திரிக்கைகளில் பிரசுரமாகும்.'நிறைய பேரு வாசிச்சிருப்பாங்க', என்று பூரிப்பாக இருக்கும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், குழப்படியாக இருந்த குடும்பச் சூழலில், நெருக்கடியாக இருந்த பொருளாதாரச் சூழலில், எனக்கிருந்த ஒரு பெரிய ஆறுதலே, நிறைய புத்தகங்கள் வாசிப்பதும், தோன்றும் கதைகளை எழுதியனுப்புவதும் தான். நிறைய எழுதுவேன். பைசா கிடைக்கும்போது பத்திரிக்கைகளுக்கு அனுப்புவேன். இல்லாத நேரம், பக்கத்திலிருக்கும் நண்பர்களுக்கு மட்டும் வாசித்துக் காட்டுவேன். அவ்வளவே !!

ஆனால், நிறைய வாசகர்களை எனக்காக உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு. "அதற்கு என்ன செய்யலாம் ?", என்று அடிக்கடி யோசிப்பதும் உண்டு.

இப்படியிருக்கையில் தான் எனக்கு, 2006-ஆம் ஆண்டு கணினி மற்றும் வலைதளத்தின் அறிமுகம் கிடைத்தது. கல்லூரியில் நடந்த ஒரு கெஸ்ட் லெச்சரில், வலைப்பூவையும் மின்னஞ்சலைப் பற்றியும் சொன்னார்கள். 'மின்னஞ்சல் மூலம் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். வலைப்பூக்கள் மூலம், நிறைய பேரிடம் நமது கருத்துக்களைக் கொண்டு சேர்க்கலாம்', என்றார்கள்.

எவ்வளவு நல்ல வாய்ப்பு !! விடுவேனாக்கும் ? நிறைய பத்திரிக்கைகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். தொடர்ந்து ஒரு வலைப்பூவையும் எழுத ஆரம்பித்தேன்.

ஆனால், வாசகர்கள் ?? ம்ம்ம்க்கூம்.. அதெல்லாம் கிடைக்கவில்லை.

சொல்லப்போனால், என்போன்று வேறு துறைகளில் பிளாக் எழுத ஆரம்பித்தவர்களெல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்று, தங்களுக்கென்று நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். ஆனால் நானோ, 'நானும் ரவுடி தான்' என்பது போல 'நானும் ஒரு பிளாகர்'

அப்போது எனக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. தவறு என்னிடம் தான் இருக்கிறது என்று. ஆம், எனக்குத் தான் அதைப் பயன்படுத்தி வாசகர்களை எவ்வாறு சென்றடைவது என்று தெரியவில்லை. மேலும், நான் தேர்ந்தெடுத்த துறையை (கதைகளை) சரியான முறையில் கையாண்டு வெற்றியடைய எனக்குத் தெரியவில்லை. அதனால், மேலும் கற்றுக்கொண்டு மெருகேற்றலாம் என்றெண்ணி ஒரு சிறு இடைவேளை எடுத்துக்கொண்டேன்.


என்ன, எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. அக்கதைகளும் என் வீட்டைத் தாண்டி வேறு எங்கும் நகரவில்லை.

இப்படியிருக்க ஒருநாள், அடுத்தகட்ட முயற்சியாக YOUTUBE-ஐ எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. சேனலை ஆரம்பித்து, நான் எழுதிய சிறுகதைகளையும் உதாரணத்துவக் கதைகளையும் மட்டும் அதில் சொல்ல ஆரம்பித்தேன். பின்னர், எனக்குப் பிடித்த சில பொதுவுடைமை இலக்கியங்களையும் சேர்த்துக்கொண்டேன்.

'இதைச் சொன்னால் நிறையபேர் பார்ப்பார்கள், அதைச் சொன்னால் நிறையபேர் பார்ப்பார்கள்' என்று எனக்கு எந்த யூகமும் கிடையாது. எனக்குப் பிடித்ததை மட்டும் நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். எதைச் சொன்னால், எனக்கு ஒரு திருப்தி கிடைத்ததோ அதை மட்டும் சொல்லி வந்தேன்.

ஆரம்பத்தில், மிகக் குறைவான எண்ணிக்கையிலான வாசகர்களே கதைகளைக் கேட்டார்கள். ஆனாலும், அவர்கள் ஒவ்வொருவரும், "இது வித்தியாசமா இருக்கு. நல்லா இருக்கு. நிறைய கதைகள் சொல்லுங்கள். மென்மேலும் வளருங்கள்" என்று மனதார வாழ்த்தினார்கள். ஒவ்வொருநாளும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

எனது நண்பர்கள் சிலரும், உறவினர்களும் கூட, எனது கதைகளை ஆவலோடு பகிர்ந்தார்கள். இவ்வளவு ஏன், எனது பார்வையாளர்களும் வாசகர்களும் கூட, தனது சொந்த சகோதரியின் காணொளியைப் பகிர்வதுபோலப் பகிர்ந்து உதவினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக, கதை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. என்னைத் தங்களில் ஒருத்தியாக நினைக்கும் ஒரு வாசகர்வட்டம் உருவாகியது. வெறும் சபரிக்கு 'APPLEBOX SABARI' என்று புதிதாக ஒரு அடையாளமும் கிடைத்தது.

ஆனாலும், இது தனியாக ஒரு மனுஷியின் வெற்றி கிடையாது.நான் வாசித்த அத்தனைப் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும், தங்களது படைப்புகளைச் சொல்ல அனுமதியளித்த ஆசிரியர்களுக்கும், ஓவியங்களை வரைந்த தந்த ஓவியர்களுக்கும், சொந்த ஓவியங்களைப் பகிர்ந்த ஓவியர்களுக்கும், அன்றிலிருந்து இன்றுவரை எனக்குத் துணையாக நின்று ஊக்கமளிக்கும் எனது வாசகர்களுக்கும், எனது வெற்றியில் எப்போதும் பங்குண்டு. எனது நன்றிகளும் அவர்களுக்குண்டு.

VOICE OVER, VIDEO EDITING இதற்கெல்லாம் பயிற்சிகள் எடுத்ததுண்டா ?

VOICE OVER -ருக்கென்று தனி பயிற்சிகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. எனது கல்லூரி நாட்களில் "காலேஜ் பீஸ் கட்ட உதவியாக இருக்குமே !!" என்று ரேடியோக்களில் வாய்ப்புத் தேடிய அனுபவமுண்டு. வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், திரும்பத் திரும்பப் பேசி பேசுவது மட்டும் இலகுவாகிப் போனது.

VIDEO EDITING - நீங்கள் நினைக்கும் அளவுக்கு சிரமமான ஒன்றே இல்லை. ஏகப்பட்ட செயலிகளும், மென்பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு, ஆர்வத்தோடு கற்றுக்கொண்டாலே போதும். பெருமளவுக்குக் கைகொடுக்கும்.

அதனால், இவை இரண்டையும் விட எனக்குப் பெரிய தலைவலியாக இருந்தது, காப்புரிமை பற்றிய புரிதல் தான். ஆரம்பத்தில், 'எது பொதுவுடைமை ? எது பொதுவுடைமையல்ல ? ஆக்க உரிமைகளுக்காக யாரை அணுக வேண்டும் ?' என்று எதுவுமே தெரியாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

குறிப்பாக, "யாருடைய அடையாளத்தையும் சிதைக்கக் கூடாது, யாருக்கும் அவர்களது சன்மானத்தை மறுக்கக் கூடாது" என்பதை எப்போதும் மனதில் நிறுத்துகிறேன். சில அனுமதிக்காக மாதக்கணக்கில் காத்திருக்கிறேன், அனுமதி பெற முடியாத ஓவியங்களுக்காகப் பதிவு செய்த கதைகளையும் கூட, சில நேரங்களில் ஒத்தி வைக்கிறேன்.

உங்களுக்கு என்ன கற்றுத் தந்திருக்கிறது இந்தப் பயணம் ?

  1. நமக்கான வாய்ப்பை நாமே உருவாக்க வேண்டும்.
  2. வெற்றி வரும் வரை முயற்சிகளைத் மட்டும் தொடர வேண்டும்.
  3. நமக்கான நாள் நிச்சயம் வரும்

இவையே நான் இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டவை. இது போக, இன்னும் நிறைய நுணுக்கங்கள்.

நீங்கள் எழுதும் கதைகளை நாங்கள் எங்கு வாசிக்கலாம் ?

இப்போதைக்கு எனது இணையப் புத்தகங்களிலும், இதோ இந்த வலைத்தளத்திலும் வாசிக்கலாம். சீக்கிரத்தில், புத்தகங்களுக்கான இணைப்பையும் தருகிறேன்.

அவ்ளோ தாங்க. சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லியாச்சு. இதுவரை வாசித்தவர்களுக்கு என்னைப் பற்றிய அறிமுகமும், என் மூலம் ஒரு நம்பிக்கையும் பிறந்திருக்குமென்று நினைக்கிறேன்.

தொடர்ந்து இணைந்திருங்கள். நாம் கதைகளோடு உரையாடலாம்.

44 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

  1. You deserve applause.. For your self confidence... I wish you all successful career. Also I wish to work with you in developing inspiration to reading by which learning in each would be possible for a better world

    ReplyDelete
  2. Wow! My blessings and support forever, madam! Let me know if you need help with Website creation. :)

    ReplyDelete
  3. Super sis ur inspiration with me

    ReplyDelete
  4. Super sis ur inspiration with me

    ReplyDelete
  5. Super sis ur inspiration with me

    ReplyDelete
  6. I proud of you sister 😊. Keep continuing...

    ReplyDelete
  7. Nan uyi urulla varai muyarchi seiven , oru veelai muyarchi seivathai nan niruthinal , athanal than nee thottrai enru enn manasachi ennai kelvi kettkum . 👏👏👏👏👏👏👏👏
    No words sister .
    Etha neenga enakagave sonna mari erukku . Ungaloda entha varthaikal ennai motivate pannuthu . Ennaku nabikka kodutha ungalukku mikka Nandri .

    ReplyDelete
    Replies
    1. Thanks much Sago.. Keep going.. Passion deserves an applause..

      Delete
  8. அக்கா உங்க குட்டி கதைகள் ரொம்ப பிடிக்கும் தினம்மும் உங்க கதை கள் கேட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் நன்றி அக்கா

    ReplyDelete
  9. அக்கா, உங்களுடைய கதைகள் எல்லாமே நல்ல ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்து உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது.

    பாரதி கண்ட புதுமைப் பெண்ணே! பார் போற்றப் பட வேண்டும்.

    இன்னும் உங்கள் பல படைப்புகளை காண காத்திருக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

    நீங்கள் பொழிந்த தேன்மொழியில் நனைந்து உருவாகிறது - "தேன் மிட்டாய் கதைகள்"

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ 🌷🌷 மேலும் வளர வாழ்த்துக்கள் 🌷🌷

      Delete
  10. SABARIMAAA MAKARAASIYAA IRUMA'' -AMMA MALARVIZHIMANGAYARKARASI

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா

      Delete
  11. Ungaloda lines laium motivation iruku ..keep rocking...

    ReplyDelete
  12. All the best sister. I used to watch your channel. Story telling is nice. Iam also online tamil writer.

    ReplyDelete
  13. sis lastaa eppa TN ku vandinga...ipavum california la irukingla.

    ReplyDelete
  14. Super sis.. romba inspiringa irunthathu.. na epo than unga channel pathan.. story solrathu rmba nala iruku.. neram porathe therila.. ketute irukanum pola iruku.. spr sis

    ReplyDelete
  15. Un uyarntha kanavugalai adaya ennam endra ondrirku uyir koduppayanal oru naal un kanakkal nijangalagum nichayamaga..!!

    ReplyDelete
  16. உங்கள் பதிபகத்திற்கு எங்களையும் அழைக்க வேண்டும் அக்கா.

    ReplyDelete
  17. 😊na first keta story devadas, antha movie pathu romba kastama irunthuchu apo tha you tube la kathai keka search pana unga story nd voice romba pudichathu athuku aprm bengali novels romba pudichathu . Unglaum romba pudichu iruku akka 💗

    ReplyDelete
  18. The potential of Sabari is infinite , living as a mom plus being a social media star is not easy as we think , which required lot of sacrifice and motivation to stay positive mindset … but you made it Sabari i know little bit about your travel . I read some where the explanation of Success “ success if a peace of mind to know that you did your best “ . Just maintain the satisfaction 🙂good luck keep inspired !!!

    ReplyDelete
  19. நீங்க எழுதிய கதயைவிட உங்கள் அனுபவ கதை சிறப்பு...எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  20. Love your short Tamil stories which is bedtime stories that I recite to my children every night. I am glad to come across your website for the pleasure of Tamil reading. Should consider compiling stories into a book. All the best and may your pursuit to spread literature will be blessed.

    ReplyDelete
  21. bro super your story intresting

    ReplyDelete
  22. நீங்க ஒரு ”சிறந்த கதைசொல்லி”

    ReplyDelete
  23. Hi sister..
    I'm recent watching your motivational stories it was really nice and incredible..When ever I feel down I need 2 things one is my mom and 2nd is motivational stories to over my situation which was provided by you✨✨Heep doing sister💐I'm expecting reply from you!

    ReplyDelete
  24. மனக்கவலையை நீக்க உங்களை பின் தொடர்ந்தேன் ஆனால் மனம் கவலை நீக்கி புனிதம் அடைகின்றது உங்கள் பதிவுகளை பார்க்க பார்க்க


    நன்றிகள் பல
    தொடரட்டும் உங்கள் பதிவுகள் 🤝🤝

    ReplyDelete
  25. Thank u akka..Really so happy and proud after attending ur today zoom meeting. ..
    Last week only I joined ur whatsapp channel..But I m ur follower from lockdown days...Seriously u r a great inspiration for me..All the best.. Me too try to achieve my goal by telling affirmations daily...Bye..How to see the snaps for today meeting? Affirmations ? For that only I come to this website first time..

    ReplyDelete
Previous Post Next Post