இதயத்தை வருடும் இதமான காதல் கதைகளுள் ஒன்று - இந்த ராஜநார்தகி மயூரியின் காதல் கதை.
இது ராஜஸ்தானிய மக்களின் மத்தியில், ரொம்பவே பிரபலம். ஆயினும், இதைப் பற்றி விரிவாக அவர்களுக்குத் தெரியவில்லை. அடிநாதத்தை மட்டும் ஆணியடித்துச் சொல்கிறார்கள். அதையொற்றி பல எழுத்தாளர்களும் கூட, சில கதைகளை எழுதியுள்ளார்கள்.அவ்வரிசையில், என்னுடைய மிக மிக சொற்பமான கற்பனையையும், 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்ற சித்தாந்தத்தையும் ஏற்றி, ஒரு சமூக மாற்றத்தின் விதையாகிய இந்தக் கதையை உங்களுக்குத் தருகிறேன். வாருங்கள் வாசிக்கலாம்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், இன்றைய குஜராத் பகுதியை 'முஹம்மது ஷா' என்று சொல்லப்படும் முகலாய மன்னர் ஒருவர், ஆட்சி செய்து வந்தார்.
அவருடைய ஆட்சிக் காலத்தில், அங்கு இரு விஷயங்கள் மிகவும் பிரபலம்.
ஒன்று, அவருடைய வீரம். மற்றொன்று, அவருடைய தலைநகரில் வாசம் செய்த, ராஜ நர்த்தகியான மயூரி.
மயூரி, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தேவதாஸிப் பெண். அவள் ஒரு புத்திசாலி, பேரழகி மற்றும் ஈடு இணையில்லாத நாட்டிய மங்கை. மயில் போல அவள் ஆடுவதைப் பார்ப்பதற்கே, எத்தனையோ நாட்டு அரசர்கள் தவம் கிடந்தார்கள். அவளைத் தங்கள் ஆசை நாயகியாக்க, எத்தனையோ பேர் துடிதார்கள்.
ஆனால், அவளோ தனது வாழ்க்கையில் யாருக்குமே இடம் தரவில்லை.
அப்படியிருக்கும்போது தான் ஒருநாள், மன்னர் முகம்மது ஷா இவளது நாட்டியத்தை பார்வையிட்டார். அவள் கட்டழகில், மயங்கினார். தன்னிலை மறந்தார், அவளைத் தன் நாட்டிற்கே கூட்டி வந்து ராஜ நர்த்தகியாக பதவியும் கொடுத்தார்.
என்னடா, இந்தக் கதை கொஞ்சம் சந்திரமுகி சாயலில் இருக்கிறதே !! என்று யோசிக்கிறீர்களா !!
ஆனால், இது அதிலிருந்து ரொம்பவும் வித்தியாசம். காதல், வீரம், துரோகம், சூழ்ச்சி, சமூக அவலங்கள் என்று இதற்கு வெவ்வேறு பரிமாணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் பார்க்க, நாம் கதையைத் தொடருவோம்.
மயூரி குஜராத்துக்கு வந்ததிலிருந்தே, அவளது வாழ்க்கை ஒரு மாதிரி சோக மாமயமாகவே நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு பக்கம், அவள் மேல் ஆதிக்கம் செலுத்த முயற்சித்த முகம்மது ஷா. மறுபக்கம், ஒரு தேவதாசி இப்படி வாழ வேண்டும், அப்படி வாழ வேண்டுமென்று அந்த வாழ்க்கை முறையையே மெச்சிக்கொண்ட அவனது தான் பானுமதி.
இப்படி சுற்றிச் சுற்றி, அவளுக்குப் பிரச்சனைகள் தான்.
அவளுக்கோ !! தான் ஒரு தேவதாசியாகப் பிறந்ததே பிடிக்கவில்லை.
அதென்ன, பிறப்பை வைத்து ஒருவருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேணுமென்று இந்த சமூகம் சொல்லுகின்ற அவலம். விரும்பினவர்களெல்லாம் என்னைப் பயன்படுத்திக்கொள்வதற்கு, நான் என்ன ஜடமா ?" , என்று அவளுக்குக் கோபம் கொப்பளித்தது.
ஆனால், இந்தக் கோவமெல்லாம் மன்னர் மன்னனின் முன்னால் எம்மாத்திரம் !!
இப்படியிருக்கும்போது, ஒரு பவுர்ணமி நாளன்று, தனியே அந்த நர்தகியை சந்திக்க வந்தார், முகம்மது ஷா.
"நீ இன்னும் ரெண்டு வாரத்தில், எனக்கு ஒரு முடிவைச் சொல்ல வேண்டும். எனது ஆசை நாயகியாக, இருக்க விருப்பமா ? இல்லையா ?", என்று கோபத்தில் வார்த்தையை உதிர்த்தார்.
"விரும்பினால், ஆசை நாயகி. இல்லையென்றால்..."
என்று உறுமிவிட்டு அவ்விடம் நகர்ந்தார்.
அவளுக்கு வேறு வழியே இருக்கவில்லை. தற்கொலைக்கு முயற்சித்தாள். குஜராத்துக்கு ராஜஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியிலிருந்த ஆறு ஒன்றுக்குச் சென்றாள். ஆனால், குதிக்கும் வேளையில் இளைஞன் ஒருவனால் காப்பாற்றவும் பட்டாள்.
அவனது பெயர் தான் - கேஹர் ராஜ்குமார்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவன். ஒரு அரசாங்க அதிகாரி. அதுவும், முகம்மது ஷாவுக்கு கப்பம் கட்டிவந்த ஒரு சமஸ்தானத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி.
அவன் மயூரியிடம், அவளது பிரச்சனைகளைக் கேட்டு அறிந்துகொண்டான். அவளுக்காக, முஹம்மது ஷாவைத் தான் எதிர்க்கப்போவதாக வாக்கு கொடுத்தான்.
இருவரும் நண்பர்களானார்கள்.
அடுத்தடுத்த சந்திப்புகளில், அந்த நட்பு காதலாக மாறியது.
அதே நேரத்தில், இந்த காதல் விவகாரம் முஹம்மது ஷாவின் காதுக்கும் எட்டியது.
சும்மா இருப்பாரா, முகம்மது ஷா ?
அப்டியே கொதிச்சிப் போயிட்டாரு
தடாலடியா, ராஜகுமார சிறை பிடிச்சாரு
சிறைக்குள்ள வச்சி
அவன ரொம்ப கேவலப் படுத்துனாரு
வெறும் இடைக்கச்சையோட மட்டும்
அவனை நடமாட விட்டு
மயூரிய அவ கையாலையே தினமும் அவனுக்கு
சாப்பாடு கொடுக்க வச்சாரு
ஆமாங்க, அந்த மாதிரியான கோலத்துல
அவனை பார்த்தா அவளுக்கு அவன் மேல இருக்குற மரியாதையே போய்டுமாம்
அவனை கோழைன்னு முடிவு செய்து அவ அப்படியே வெறுத்துருவாளாம்
ஆனா, நீங்கலே சொல்லுங்க
உண்மையான காதல் அப்படியெல்லாம்
லேசுல மாறிடுமா ? என்ன ?
மயூரிக்கு மன்னர் மேல கோவம் வந்தது தான் மிச்சம்
அந்தக் கோவத்துல அவ கண்ணா பின்னான்னு முடிவுகள் எடுத்தா
சிறைச்சாலைக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து
ராஜ்குமாரை தப்பிக்கவும் வச்சா
இப்படி தப்பிச்சுப் போன ராஜ்குமார்
பொய் அடைக்கலம் தேடுனது
இந்த முகம்மது ஷாவுக்கு எதிரான
ஒரு புரட்சியாளர்கள் படைலங்க
அவங்களும் அவனை நல்லா வளர்த்துவிட
மன்னருடைய நிறைய தளவாடங்களை வெட்டு வச்சான் ராஜ்குமார்
இதையெல்லாம் கேள்விப்பட்ட
முகம்மது ஷாவுக்கு கோவம் தலைகேருச்சி
ராஜ்குமாரை கண்டவுடன் தலையை சீவ
அவரு ஆணையிட்டார்
மயூரியையும் அந்தப்புரத்துக்கு அழைத்துவர
அவரு கட்டளையிட்டாரு
இந்த இடத்துலதான்
லேசா சுதாரிச்சிகிட்டா மயூரி
மன்னரை பொய் சந்திச்சா
அவர்கிட்ட ஆசை வார்த்தைகள் பேசுனா
"ஓடிப் போயிட்டு என்ன கைவிட்ட அந்த ராஜ்குமாருக்கு
நீங்க எவ்ளவோ மேல்
நான் உங்களோடவே என் வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன்
வாழ்க்கை பூரம், நான் உங்களுக்கு ஆசை நாயகியா வாழுறேன்
ஆனா, அதற்கு ஒருயொரு நிபந்தனை"
அப்டீன்னு தன்னுடைய சூழ்ச்சி வலைல அவரை வீழ்த்துனா
அதாவதுங்க
மயூரிக்கு தனக்கொரு திருமணம் நடக்கணும்னு
ரொம்ப நாளா ஒரு ஆசையாம்
அதுவும் சாதாரணமான திருமணமில்ல
அந்த ஊரே கூடி நடத்துற பிரம்மாண்டமான திருமணம்
மன்னருக்கு அவ ஆசை ஞாயமா பட்டது
அவ பேச்சுல மயங்கி
உடனேயே அதுக்கு சம்மதிச்சாரு
திருமண ஏற்பாடுகள் எல்லாம் நல்லபடியா நடந்தது
மன்னர் தனக்கு வேண்டிய பாதுகாப்புக்கும்
திருமண கோலாகலத்துக்கும் ஏற்பாடுகள் செய்ய
ரகசியமாக ராஜகுமாரனுக்கு செய்தியனுப்புனா
நர்த்தகி மயூரி
அந்தத் திருமணத்தின்போது நடக்குற ஊர்வலத்துல
அவனும் கலந்துக்கிட்டு
அவள காப்பாத்தி கூட்டிட்டுப் போகணும்னு
வேண்டுகோளும் வச்சா
ஆனா, அவ அனுப்புன அந்த செய்தி
ராஜ்குமாரனுக்கு சரியான நேரத்துல போய்ச் சேரல
அதுக்கு பதில்
இந்த மயூரியோட
பிரம்மாண்டமான திருமணத்தைப் பற்றிய செய்தி மட்டும்
சரியாய் பொய் சேர்ந்துருந்து
ஆனாலும்,
அவன் அவளை நம்புனான்
இந்தத் திருமணம் அவளோட சம்மதத்தோட நடந்திருக்க வாய்ப்பே இல்லேன்னு
உறுதியா இருந்தான்
அந்தத் திருமண ஊர்வலத்துல தானும்
தன்னோட இருந்த புரட்சியாளர்களும் கலந்துக்க
ஏற்பாடுகளும் செய்தான்
சீகரியத்துலேயே
திருமணத்துக்கான அந்த நாளும் வந்தது
ஒரு பல்லக்கில்
மயூரியும் முகம்மது ஷாவும் உட்கார
அந்த ஊர்வலமும் தொடங்குச்சி
ஆனா, எந்த இடத்துல ராஜகுமாரன் வந்து தன்னை காப்பாற்றுவான்னு
மயூரி எதிர்பார்த்து காத்திருந்தாளோ
அந்த இடத்துல
அவன் வரவே இல்ல
மாறா, "என்ன மயூரி !!
எதிர்பார்த்தது நடக்கலையோ!!" னு
முகம்மது ஷா கிட்டேர்ந்து ஒரு கர்ஜனை தான் வெளி வந்துது
ஆமாங்க அவருக்கு அவ திட்டம் எல்லாமே தெரிஞ்சிருந்துது
அதுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும் அவரு எடுத்து வச்சிருந்தாரு
"இனி அவ்ளோ தான் மயூரி
ஒரு தேவதாசிய காதலிச்சா, அவ பதிலே விட்டுட்டுப் போயிருவான்னு
அந்த ராஜகுமரன் இப்ப பொலம்பிட்டு தான் இருப்பான்" அப்டீனு
அவளை பரிகாசம் செஞ்சாரு
பார்வையாலேயே அவளை சுட்டெரிச்சாரு
அதே நேரத்துலங்க,
அவங்க எதிர்பாராத மாதிரி,
அந்த பல்லக்குக்குள்ள நுழைஞ்சி வந்தான்
ஒரு விளக்குத் தூக்கி
"முட்டாள் மன்னரே !!
ஒரு பெண்ணை அவள் குளத்தை வச்சி உதாசீனப்படுத்தி அழிக்க
நான் என்ன மடப்பயலா !!
எனக்கு என் மயூரா பத்தி தெரியும்
யாருக்குத் தெரியலேன்னாலும் எனக்கு நல்லாத தெரியும்னு சொல்லி
தன்னுடைய மறுவேஷத்தை கலைச்சான்
பார்த்தா, கேஹர் ராஜ்குமார்
அப்புறம் என்னங்க
ராஜ்குமார் மற்றும் புரட்சியாளர்கள் கோஷ்டிக்கும்
மன்னருடைய படைவீரர்கள் கோஷ்டிக்கும்
ஒரு பெரிய கலவரமே நடக்க
முகம்மது ஷா அங்க வீழ்த்தப்படுறாரு
மயூரியும் ராஜ்குமாரும் தப்பிச்சிப் போறாங்க
அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு
அந்த மக்களுக்குப் பெருசாத் தெரியலைங்க
ஆனாலும்,
சமூகத்தால் நம்ம சந்திக்கற அநீதியை அப்படியே ஏத்துக்க கூடாதுங்குறதுக்கும்
அதிகாரத்துக்கு நம்ம பயப்படக்கூடாதுங்குறதும் சான்றா
இந்தக் கதை தொடர்ந்து
ராஜஸ்தானிய மண்ணுல சொல்லப்பட்டதுத் தான் வருது
தனக்கு மறுக்கப்பட்ட உரிமையை
போராடிப் பெற்றுக்கொண்ட