மீராபாய் சானுவின் வெற்றிக் கதை - Motivational Story


இந்த உலகத்தின் தலை சிறந்த பாடம், ஒருவர் தனது தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கிற பாடம் தான் என்று சொல்வார்கள். ஆனால், நம்மில் பலரும் அப்படிக் கற்றுக்கொள்வதில்லை. மாறாக, யாராவது ஒரு நபரின் மீதோ, சூழ்நிலைகளில் மீதோ, அதிர்ஷ்டத்தின் மீதோ பழிபோடுபவர்களாகத் தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறோம். 

ஆனால், அப்படி எதன் மீதும் பழி போடாமல், தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள முயலும்போது, அது நமக்குக் கொடுக்கும் வெற்றி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம், இந்தக் குட்டிக் கதையில்.

இந்தக் கதையை காணொளியாகப் பார்க்க, Please check this video


இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்சில், வெள்ளிப் பதக்கத்தை வாங்கி, இந்தியாவின் ஸ்கோர் போர்டைத் திறந்து வைத்தவர், மணிப்பூரைச் மீராபாய் சானு. அந்த ஸ்கோர் போர்டில், அவர் பெயரின் எதிரே ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பார்த்ததும் நமது நாட்டிலிருந்து அவருக்கு அலாதியான பாராட்டு குவிந்தது. எல்லாப் பத்திரிக்கைகளும் அவருடைய முகத்தை முதல் பக்கத்தில் அச்சடித்துப் பெருமை படுத்தின.

ஆனால், ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு, இதே மீராபாய் சானுவுடைய பெயர், பத்திரிக்கைகளில் என்ன மாதிரி இடம்பெற்றிருந்தது என்று தெரியுமா ? "ரியோ ஒலிம்பிக்ஸில் தனது போட்டியை நிறைவு செய்யாமல், தோல்வியோடு தாயகம் திரும்பினார், மணிப்பூரின் மீராபாய். இந்தத் தோல்விக்குக் காரணம் என்ன ? அலட்சியமா !! " என்று.

உண்மைதான், 2016-ல் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் மீராவால், அந்தப் போட்டியை சரியாகச் செய்யமுடியாது போனது. ஸ்கோர் போர்டில் அவரது பெயருக்கு நேரே "Did Not Finish" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, இதைத் தாங்கிக்கொள்ள இயலாது தவித்தார் மீரா. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், போதுமான அளவுக்கு வெளியுலகத்துக்குப் பழக்கப்படாத, மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவர். அதுவும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். ஒருநாள் மொத்தமாக பச்சை மூங்கில்களை கட்டி எடுத்து வரும்போது, ஒரு கனமான பெரிய கட்டை, மீரா அலேக்காகத் தூக்கித் தனது தலையில் வைக்க, "இது சாத்தியமே இல்லையே !! இந்தப் பெண் பெரிய பலசாலியப்பா !!" , என்று புகழ்ந்தனர் சுற்றத்தார். அப்படித் தான் மீராவுக்குத் தனது தனித்திறமையையே தெரிய வந்தது. 

அவர் வளர்ந்த பின்னணியிலிருந்து ஒலிம்பிக்ஸ்சுக்குச் செல்வதே பாராட்ட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அதற்கு மாறாக, மீராவுக்குக் கிடைத்ததென்னவோ மன அழுத்தம் மட்டும்தான். இவருக்கு ஏற்பட்ட இந்த மன அழுத்தம், அவரை மிகுதியாக வாட்டி வதைத்தது. 

இதையெல்லாம் கவனித்த அவரது கோச், மீராவை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் வைத்தார்.  மீராவுடன்  பெரிய அந்த நிபுணர், "உனது தோல்விக்கு காரணமாக இதெல்லாம் இருக்கலாம்" , என்று சொல்லி அவருக்கு முன்பாக மூன்று காரணங்களை எடுத்து வைத்தார்.

ஒன்று - "ஒலிம்பிக்சில் இது உனது முதல் முறை என்பதாலும், எப்படியாவது வெற்றியடைய வேண்டுமென்ற பதற்றத்தாலும், இந்தத் தோல்வி நிகழ்ந்திருக்கலாம்"

இரண்டு - "ஒலிம்பிக்சுக்கு, நீ இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் பயிற்சிகளை விட, அதிகமான பயிற்சிகள் தேவைப்பட்டிருக்கலாம்"

மூன்று - "உனது உடல் உனது கட்டுப்பாட்டிலிருந்தாலும், உனது மனம் உனது கட்டுப்பாட்டில் இல்லாமல் போயிருக்கலாம்"

இப்படி அவர் சொல்ல, மீரா தனது தவறுகளை உணர்ந்து கொண்டார். பளுதூக்கும் பயிற்சியோடு சேர்த்து, யோகா, தியானங்கள் போன்றவற்றையும் செய்ய முடிவு செய்தார். அடுத்த ஐந்து வருடங்கள் கடுமையான பயிற்சி. முதுகில் சில பிரச்சனைகள், தோள்பட்டையில் பிரச்சனைகள், கொரோனாவால் ஒலிம்பிக்ஸ்சே தள்ளிப்போனது என்று  மாறி மாறி பல சவால்கள் வந்தாலும், அவர் தனது பயிற்சிகளைக் கைவிடவில்லை.

சில நாட்களில், அவர் எதிர்பார்த்த மாதிரி டோக்கியோ ஒலிம்பிக்ஸ்சும் வந்தது. அதில் கலந்துகொண்டு கலக்கவும் செய்தார். அதில் அவர் வாங்கிய வெள்ளிப்பதக்கம், பாராட்டு, பெயர், புகழ் எல்லாம் - உங்களுக்கே தெரியும்.

நமது தோல்வியின்போது, யாராவது ஒரு நபரின் மீதோ, சூழ்நிலைகளில் மீதோ, அதிர்ஷ்டத்தின் மீதோ பழி போடாமல், அந்தத் தோல்வியிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டு திருத்தங்கள் செய்வோமாகில், அது கொடுக்கும் வெற்றி இப்படிப்பட்டதாகத் தான் இருக்கும்.

மீராவுக்குக் காரணம் சொல்லி விலகிவிட பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. சிறப்பான பல காரணங்களும் கிடைத்தன. ஆனால், அந்த மாதிரியான காரணங்களைத் தேடித்திரியாது, பாடங்களை மட்டும் தேடித்திருத்திய அவரது குணமே, அவருக்கு வெற்றியைக் கொடுத்தது. 

அப்படிப்பட்ட ஒரு குணத்தை நாமும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், வாழ்வில் பல முன்னேற்றங்களைக் காண வேண்டுமென்று சொல்லி, இந்தக் கதையை முடிக்கிறேன்.நன்றி.

 Check these stories also from APPLEBOX

உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 

தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.

If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,Applebox Motivational, Motivational Stories Applebox, Kutty Stories Applebox and Oru Kutty Kadhai Applebox

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, Motivational Video in Tamil for College Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post