Motivational Stories in Tamil | Four Secrets | ஒரு குட்டிக் கதை


பல காலத்திற்கு முன், ஒரு அழகான தீவில், ஒரு ஞானி இருந்தார்.

அவர் ஞானிதான். ஆனால் அவருக்கென்று ஒரு மடம் கிடையாது. சொத்து, காசு, பணம் என்று எதுவுமே கிடையாது. அவருக்குச் சொந்தமென்றால், அது அவர் வைத்திருக்கிற மூட்டை மட்டும்தான். மூட்டையில் என்ன இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது.

நாடோடி மாதிரி, ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டே இருப்பார். அவர் போகிற அந்த ஊரில் இருக்கும் மரத்தடியிலேயே, குகைகளிலோ, இல்லை தன்னை நம்பும் பக்தர்களின் வீடுகளிலேயோ தங்குவார். நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு, இன்னொரு ஊருக்கு மாறிச் சென்றுவிடுவார்.

அதனாலேயே, அவருக்குப் பெரிய அளவுக்கு சீடர்கள் என்று யாரும் கிடையாது. அவர் எப்பொழுதும் தனியாத் தான் இருப்பார்.

ஆனால், அவரிடம் ஒரு தனிச்சிறப்பு இருந்தது. அவரை நம்பி யாரவது ஒருவர், அவரிடம் வந்து தனது கஷ்டங்களையெல்லாம் சொன்னால், அவர் அதற்கானத் தீர்வுகளைச் சொல்வார். அறிவுரையும் வழங்குவார். அந்த அறிவுரைகளைக் கேட்ட நிறையபேருக்கு பெரிய பெரிய அதிசயங்களெல்லாம் நடந்ததாகப் பேச்சு உண்டு.

சில நேரங்களில், அவரிடம் கஷ்டங்களோடு வருபவர்களுக்கு, அவர் வைத்திருக்கிற அந்த மூட்டையிலிருந்து ஏதாவது சில பொருட்களையும் கொடுப்பதுண்டு. ஒரு சிலருக்கு துணிமணிகள், உணவு, ஒரு சிலருக்கு புத்தகங்கள், இன்னும் ஒரு சிலருக்கு தங்கம், வெள்ளி போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட இந்த ஞானி, ஒருநாள் எப்பொழுதும்போலப் பிரயாணம்பண்ணி ஒரு கிராமத்துக்குச் செல்கிறார். அந்த கிராமத்தில், ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தார்.

To listen to this Motivational Story in Tamil as a video form APPLEBOX By Sabari


அந்த ஊரிலிருக்கிற மக்கள் நிறையபேர், அவரிடம் வந்து தங்களது குறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எப்பொழுதும்போல, அவரிடம் வந்து தங்களது கஷ்டங்களைச் சொல்கிறார்கள். அவரும் எப்பொழுதும்போலத் தான் நினைக்கிறபடியான உதவிகளைச் செய்கிறார்.

அப்படியிருக்கும்போது ஒரு நாள், ஒரு வியாபாரி அவரைப் பார்க்க வருகிறார். அவருக்குத் தொழிலில் ஏதோ பெரிய நஷ்டம் ஏற்பட்டுப் பெரிய அளவில் மனக்கஷ்டத்தோடு இருக்கிறார். தனது மிகுதியான கஷ்டங்களையும் அந்த ஞானியிடம் பகிர்ந்து கொள்கிறார்.

இதைக் கேட்டபின் அந்த ஞானி, தனது மூட்டைக்குள்ளிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து அந்த வியாபாரியிடம் கொடுத்துவிட்டு, "இதில் நான்கு ரகசியங்கள் இருக்கின்றன. இவற்றால், நீ நிச்சயம் உன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தைத் தொட முடியும்" என்று சொல்கிறார்.

அவனும் மிக ஆசையோடு அதை வாங்கிக்கொண்டு, தனது வீட்டுக்குத் திரும்புகிறான். வீட்டுக்கு வந்தவுடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கிறான். அதில், நான்கு பொருட்கள் இருக்கின்றன. ஒரு மணி, ஒற்றை ருபாய் நாணயம், ஒரு சிப்பி, ஒரு வெண்முத்து ஆகியவை இருக்கின்றன.

இதையெல்லாம் பார்த்ததும் இந்த வியாபாரிக்கு ஒரு பெரிய ஏமாற்றம். எதாவது தங்கம், வெள்ளின்னு இருந்திருக்கலாம். அல்லது ஒரு சாமி சிலையாவது இருந்திருக்கலாம். 'இது என்ன ? சம்பந்தமில்லாமல் எதெல்லாமோ இருக்கிறதே' , என்று வருந்தினான்.

ஆனாலும், அதற்குள் ஏதோ புதிர் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதனால், மறுபடியும் அந்த ஞானியை சந்திக்கச் சென்றார். அந்த ஞானியோ, "நாளை வா" என்று சொன்னார்.

அடுத்த நாளும், அந்த வியாபாரி அந்த இடத்துக்குச் சென்றார். அடுத்த நாளும் இதே தான். "நாளைக்கு வா", என்று சொன்னார் ஞானி. வியாபாரி மறுபடியும் வந்தார். இந்த ஞானியும் சொல்வதாக இல்லை. அந்த வியாபாரியும் விடுவதாக இல்லை. இப்படியே, பத்து நாள்கள் ஆகிவிட்டன.

அது பதினோராவது நாள். அன்று அந்த ஞானி அந்த ஊரைவிட்டுக் கிளம்பும் நாள், அதுதான்.

அன்று எப்படியும் தனக்கான பதிலை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கையில் அந்த வியாபாரி வந்தார். அந்த ஞானியும் அவரிடம் அந்தப் பெட்டியைத் திறக்கும்படிச் சொன்னார். அன்று பார்த்ததுபோலவே, அந்தப் பெட்டியில் ஒரு மணி, ஒற்றை ருபாய் நாணயம், ஒரு முத்து, இவைதான் இருந்தன.

சிரித்துக்கொண்டே, அவற்றுக்கு விளக்கம் சொன்னார், அந்த ஞானி.

அந்த மணி, காலத்தைக் குறிக்கிறது. அந்த ஒற்றை ருபாய் நாணயம், செல்வதைக் குறிக்கிறது. அந்தச் சிப்பியும், அந்த முத்துக்களும் வார்த்தைகளைக் குறிக்கின்றன.

அந்த மணி, காலத்தைக் குறிக்கிறது. முதலில், ஒரு மனிதன் தனது நேரத்தைச் சரியாகக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். தனது நேரத்தைச் சரியாகக் கையாள்கிறவன், எல்லாவற்றையுமே சரியாகக் கையாள்கிறான்.

இரண்டாவது, அந்த ஒற்றை ருபாய் நாணயம். ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் செல்வத்தையும் சரியாகக் கையாள வேண்டும். உழைத்துச் சேர்க்கும் செல்வதை எப்பொழுது எப்படி எதற்கு செலவழிக்க வேண்டும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும்.

அதே நேரத்தில், எவ்வளவுதான் செல்வத்தைச் சேர்த்தாலும், இறுதியில் இந்த ஒற்றை ருபாய் நாணயம்கூட நமக்குச் சொந்தமில்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஞாபகம் வைத்தால் மட்டுமே, வாழ்வில் நிம்மதியும் இருக்கும்.

மூன்றாவது, அந்த முத்துக்கள். மூழ்கியெடுக்கும் முத்துக்களைப் போல, நீ பயன்படுத்தும் வார்த்தைகள் இருக்க வேண்டும். என்னதான் முத்தாக இருந்தாலும், தேவையில்லாத இடத்தில் அதை வீசி எறியக் கூடாது. மதிப்பு இருக்காது. அதைப்போலத்தான் வார்த்தைகளும். தேவையில்லாத இடத்தில், பேசக்கூடாது. தேவையான இடத்தில், ஆராய்ந்து அளந்து பேச வேண்டும்.

"இவைதான் நான் சொன்ன ரகசியங்கள்" , என்று சொன்னார் அந்த ஞானி.

"நான்கு ரகசியங்கள் என்று சொன்னீர்களே. அந்த நான்காவது ரகசியம் என்ன ?" , என்று கேட்டார் அந்த வியாபாரி.

"இந்த மூன்று ரகசியங்களையும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதை செயல்படுத்தவும் தெரிய வேண்டும் " என்று சொல்லி முடித்தார், அந்த ஞானி.

இதில், எத்தனை உண்மை இருக்கிறது பாருங்கள்.

நேரம், பணம், வார்த்தைகள் ஆகியவற்றைச் சரியாகக் கையாண்டு, விடாமுயற்சியோடு உழைப்பவர்களுக்குத் தான், வெற்றி வந்து சேரும்.

இன்று, இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் நாமும், இவற்றின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அதை உணராதவரையில், வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.

நாம் பல நேரங்களில், நேரத்தை வீணடித்தபின்தான் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். பணத்தை விரயம் செய்தபின்தான், பணத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். கோபத்தில் வார்தையைப் பேசிவிட்டுக் காயப்படுத்திய பின்னரோ, ரகசியங்களை சொல்லிவிட்டு துரோகத்தை அனுபவித்தபின்னரோ தான், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிகிறோம்.

ஆக மொத்தத்தில், எல்லாம் கைமீறிப் போன பின்னர்தான், அதனதன் முக்கியத்துவமே புரிகிறது. அந்த மாதிரி இல்லாமல், முன்னரே அவற்றின் முக்கியம் அறிந்து செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால், உண்மையோடு இருந்தால், விடாமுயற்சியோடு செயல்பட்டால், உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,
Applebox Motivational
Motivational Stories Applebox, Kutty Stories Applebox,
Oru Kutty Kadhai Applebox and

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post