AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN
இது 2020-ஆம் ஆண்டு வெளியான எனது குட்டிக் கதையாகும். 'நமக்கு ஏன் பயம் ஏற்படுகிறது ?' என்பதை விளக்கி இந்தக் கதையை எழுதியிருந்தேன். இதில் சொல்லப்பட்ட காரணம் ஏற்புடையதாக இருந்ததால், இது பெரும் வரவேற்பும் பெற்றது.
ஒருவேளை நீங்கள் காரணமற்ற பயத்தால் வருந்துகிறீர்கள் என்றால், இதை நிச்சயம் வாசியுங்கள்.
To watch this as a video, please click the PLAY BUTTON below
சில காலத்துக்கு முன்பு, ஒரு ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். அவனுக்கு ஒரு வியாபாரம் தொடங்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. ஆனால், அவனிடம் ஓரளவுக்கு மட்டும்தான் பணம் இருந்துது. அதனால் அவனும், மீதி பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்தான்.
அப்பொழுது அவனுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவனுடைய தாத்தா கொடுத்த ஒரு பரிசு நினைவுக்கு வந்தது. அது ஒரு அழகான ஆன்ட்டிக் புத்தர் சிலை. அதைக் கொடுக்கும்போதே, அந்தச் சிலை குறைந்தபட்சம் 5000 டாலருக்காவது விலைபோகும் என்று அவனது தாத்தா சொல்லியிருந்தார்.
'5000 டாலரென்பது நிச்சயமாக நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்' , என்று நினைத்த அந்த வைப்பின் அந்தச் சிலையை விற்க முடிவு செய்தான. அதற்கான விளம்பரத்தை ஆன்லைன் தளமொன்றிலும் கொடுத்தான்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில், ஏகப்பட்ட நபர்கள் அவனைத் தொடர்பு கொண்டார்கள். அதில் ஒருவர் அந்த சிலையை வாங்குவதற்காக அவன் வீட்டுக்கும் வந்தார்.
எப்படியும் சிலை விற்றுவிடும், நமக்குத் தேவையான பணமும் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்போடே காத்திருந்தான், அந்த வாலிபன்.
ஆனால், வந்தவரோ அந்த சிலையைப் பாத்த உடனேயே, ஏமாற்றமடைந்தார். "இது போலியான ஆன்ட்டிக் சிலை தம்பி. எனக்கு இது வேண்டாம்" ,என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அந்த வாலிபனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆயினும், அடுத்த நபருக்காகக் காத்திருந்தான். அடுத்து ஒரு நபரும் வந்தார். அவரும், அதையே தான் சொன்னார். "இந்தச் சிலை 500 டாலர் கூடத் தேறாது. இது எனக்கு வேண்டாம்" என்று சொல்லிட்டுக் கிளப்பினார்.
இப்படியே, கிட்டத்தட்ட 10 நபர்கள் வந்துட்டுப் போனார்கள். சிலையோ விற்றபாடில்லை.
இந்த வாலிபனுக்கு குழப்பமாக இருந்தது. 'எல்லாருமே, இது போலி சிலையென்று சொல்லிவிட்டார்களே, இதற்குமேல் இதைவைத்து என்ன செய்யப்போகிறோம் ?' என்று நினைத்து வருந்தி அடுத்ததாக வந்த ஒரு நபரிடம், 750 டாலர்களுக்கு அந்தச் சிலையை விற்றுவிட்டான் அவன்.
நாட்கள் கடந்து சென்றன. அவனும் அவன் தொழிலுக்காக அலையை ஆரம்பித்தான்.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, அவனது தொழில் காரணமாகப் பக்கத்துக்கு ஊருக்குச் சென்ற அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஏனெனில், அங்கிருந்த கடைத்தெருவில், ஆன்ட்டிக் பொருட்கள் விற்கும் கடையொன்றில், அவன் விற்ற அதே சிலை இருந்தது. ஆனால், 750 டாலருக்கு அவன் விற்ற சிலை 7000 டாலர்கல் வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்தத்த்து.
கோபத்தோடு அந்தக் கடைக்காரிடம் சண்டைக்குப் போன இந்த வாலிபனிடம் அந்தக் கடைக்காரர் பதில் சொன்னார், " நீ முட்டாளாக இருந்ததற்கு நான் என்ன செய்ய முடியும்னு ?" என்று.
அவங்களை சொல்லி என்ன பயன் ? பொருள் போனது போனதுதானே !! அதனால், ஏக்கத்தோடும் மிகுந்த வருத்தத்தோடும் தனது வீடு வந்து சேர்ந்தான் அந்த வாலிபன்.
இன்று இந்தக் கதையை உங்கள் வாழ்க்கையோடு பொருத்திப்பாருங்கள். அந்தச் சிலைதான் உங்கள் முயற்சியும் திறமையும. கும்பல்தான், சில சுயநலம் வாய்ந்த மனிதர்களும், அவர்கள் உருவாக்கும் சூழ்நிலைகளும்.
அவர்கள் உருவாக்கும் பயத்திலிருந்து, குழப்பத்திலிருந்தும் நாம் தப்பிக்க ஒரே வழி, நமது திறமையை முழுவதுமாக நம்பி முயற்சி செய்வதே ஆகும். தன்னபிக்கையும் தெளிவான சிந்தனையும் ஒருக்காலும் தோற்றதில்லை. அதனால், இதை நீங்கள் நிச்சியம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள்
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil
To watch this as a video, please click the PLAY BUTTON below